வியாழன், 9 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் -38 : நலவாழ்வு.

 

தமிழாய்வுத் தடங்கள் -38 : நலவாழ்வு.


இலண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்களும் உலக மருத்துவ ஆய்வுக்குழுவும் இணைந்து  ஒரே ஒரு மாத்திரை பசிக்காத நிலையைத் தோற்றுவித்து உணவு உண்ணத் தேவையில்லாத  ஓர் அரிய அணுத்திரள் அஃதாவது பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு ஆகிய மாலிக்குயுல் பசி எடுக்காத  மூலக்கூறு அதற்கு   அசெடேட்  என்னும் நேர் மின்னூட்டணு ஆகும்.  நாம் உணவில் உள்ள நார்ச்சத்து உண்டு செரிக்கும் பொழுது அசெடேட் மூளைக்குச் சமிக்ஞை அனுப்பி உணவு உண்ண வேண்டாமென்று கட்டளையிடுகிறது. ஆஃதாவது அசெடேட் உடலிலிருந்து வயிறு- கல்லீரல் – இதயம் – மூளைக்குச் சென்றடைந்து பசியைக் கட்டுப்படுத்திவிடுகிறது. கற்கால மனிதர்கள் 100 கிராம் அளவு நார்ச்சத்து கொண்ட உணவை உண்டனர். ஆனால் தற்காலத்தில் மிகக் குறைந்த அளவிலான நார்ச்சத்து உண்கிறோம்.  இவ்வாய்வில் அசெடேட் நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கச் செய்வதால்  அதிகப்படியான உணவைத் தடுத்துவிடுகிறது. அளவுக்கு அதிகமான உடல் எடை கூடுவதையும் தடுக்கிறது.

நம் முன்னோர்கள் அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்டு  பலநாள்கள் உணவு உண்ணாமல் இருந்திருக்கின்றனர்.

போகர் சித்தர்:

”தலைமைச் சித்தர், அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காதுமுடி நரைக்காதுபார்வை மங்காதுஇவ்வளவு ஏன்எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்..”

தந்தை பெரியார்:

 அறிவியல் மேலைநாடுகளில் விரைந்து வளர்வதைச் சுட்டிக்காடி, இனிவருங்காலங்களில் ஆண் பெண் சேர்க்கையின்றி குழந்தை பிறக்கும் ; மணித ன் ஒரே ஒரு மாத்திரையைப் போட்டுக்கொண்டால் உணவு உண்ண வேண்டிய தேவை இல்லாமல் போகும் காலமும் வரும். என்றார்.

பெரியார் பல்லாண்டுகளுக்கு முன்னர் கூறிய இவ்விரண்டு  அறிவியல் சிந்தனைகளும் இன்று மெய்யாகின்றன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக