வியாழன், 2 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் – 32:சோழப் பேரரசின் அரசியல் மேலாண்மை.

 

தமிழாய்வுத் தடங்கள் – 32:சோழப் பேரரசின் அரசியல் மேலாண்மை.



அரசியல் ஆய்வுநூல்களில் சோழர்களின் அரசியல் நிருவாக மேலாண்மை அதிகார ஆணைகள்  தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை என்கிறார், சிகாகோ பல்கலைக் கழகப் பேராசிரியர் விட்னி காக்சு.

1070இல்  ஆட்சி செய்த சோழ அரசர்களின் அரசியல்,  சமுக செயற்பாடுகள்  கல்வெட்டுகளில் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான கல்வெட்டுகள், கங்கைகொண்ட சோழபுரம், தாரசுரம், தஞ்சாவூர் ஆகிய  கோவில்களில் இடம்பெற்றுள்ளன.சுமார் 19 ஆவணங்களைக்    குலோத்துங்கன் ஆதிராசேந்திரன் பெயரில் வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் 16 ஆவணங்கள் கி.பி.1070 -1071 இல் வெளியிடப்பட்டுள்ளன.

ஆவணங்கள் குலோத்துங்கன் உறவினரான ராசேந்திரன் பெயரில் அவனது கி.பி. (1071 – 1072) இரண்டாம்  பெயரில் இரண்டாம் ஆட்சியாண்டில் வெளியிட்டும் தொடர்ந்து மே,  1074 ஆம் ஆண்டில் முதல் ஆவணம் அவனுடைய புதிய பெயரான குலோத்துங்கன் பெயர்  தெரிகிறது.

இராசராசன் ஆட்சிக்காலத்தில்ஆவணங்கள்  வருவாய்த்துறையின் கீழ்  நாடு பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது .

கோவில் சுவர்களின் மாடங்களில் அமைந்துள்ள  சிறு உருவச்சிலைகள் வழியே (தாராசுரத்தில் பெரியபுராணம், பிரகதீசுவரர் கோவில் கங்கைகொண்டசோழபுரத்திலும்)  அரிய கருத்துகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் காக்சு செய்தியாளரின் வினாக்களுக்கு விடையளித்துள்ளார். அவர் தன்னைப்பற்றிக்கூறும்பொழுது, “ நான் தொல்லியல் ஆய்வாளனோ, களப்பணியாளரோ அல்ல; ஆய்வுரைகளின் ஆய்வாளன், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக