சனி, 11 ஏப்ரல், 2026

தமிழமுது –261– தொல்தமிழர் இசை மரபு:121 ...இசைமரபு - எழுச்சி ; பக்தி இலக்கியங்கள்:

 தமிழமுது –261– தொல்தமிழர் இசை மரபு:121 நீட்சியும் -  வீழ்ச்சியும்ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

இசைமரபு - எழுச்சி ; பக்தி இலக்கியங்கள்பண்சுமந்த பாடல்கள். 

பல்லவர் ஆட்சியின் பிற்பகுதி சமய மறுமலர்ச்சிக் காலமாகும்ஓவியம்சிற்பம்நடனம்இசைகட்டிடக்கலை முதலாய பல கலைகளும் செழித்து வளர்ந்தன.  

ைவ நாயன்மார்களும்வைணவ ஆழ்வார்களும் பண் சுமந்த பாடல்களைப்பாடி  பக்தி இலக்கியைங்களை ருவாக்கினர். த்தகைய ள்ளம் ருக்கும் க்திப் னுவல்களைப் ிற ொழிகளில் ாணுதல் ரிது ன்பர்.  

இசைத்தமிழ் இலக்கியம் 

 மன்னர்களையும் மற்றவர்களையும் பாடுவதை விடுத்துமாதேவனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்ட பக்தி இலக்கியங்கள்பண்ணோடு பாடுவதற்கு ஏற்றவையாக அமைந்தனபாவினத்துள் ஒன்றாகிய விருத்தப்பா பயிலப்பட்டது 

சங்ககாலத் தமிழ்ச் சமய நெறிகள் நெகிழ்ந்து வடபுல வேத நெறிக்கு இடம் கொடுத்தனபழைய சைவ வைணவ மரபினரும் தம்முள் ஒன்றாகிப் புறச் சமயங்களாகிய பெளத்தசமண சமயங்களை ஒடுக்கினர். 

பல்லவர் காலத்தில்,பக்திச் சுவை கனிந்த இசைத்தமிழ் இலக்கியம் நன்கு வளர்ந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கெனத் தனி்த்த ஓர் இடத்தைப் பெற்றது. 

ி.பி. 7ஆம் நுற்றாண்டில் வாழ்ந்தசைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்பந்தர்,  திருநாவுக்கரசர்அப்பூதி அடிகள்முருகநாயனார்சிறுத்தொண்டர்திருநீலநக்கர்குலச்சிறையார்,மங்கையர்க்கரசியார்நெடுமாறர்திருநீலகண்ட யாழ்ப்பாணர்முதலியோரும் கி.பி. 8ஆம் நூற்றாணடில் வாழ்ந்த கோட்புலிநாயனார்நரசிங்க முனையதரையர்சோமாசிமாறர்கலிக்காமர்சடையனாஇசைஞானியார்முதலிய நாயன்மார்கள் பக்திப்பாடல்களால் சைவ சமயத்தைப் பேணிக்காத்தனர். 

 ுற்காலப் பல்லவ மன்னராகிய ஐயடிகள் காடவர் கோன் சேத்திர வெண்பாவும்காரைக்காலம்மையாரின் திருப்பதிகங்களும் உண்மைச் சைவைத்தை நிலைநாட்டிய திருமூலரின் திரு மந்திரமும்பின்னர் எழுந்த திருஞான சம்பந்தரின் தேவாரத் திருப்பதிகங்கள் முதற்கொண்டுசேக்கிழாரின் பெரியபுராணம் ஈறாக 27 அருளாளர்கள் பாடிய அரும் பாடல்களைப் பன்னிரு திருமுறைகள் என்று போற்றுகின்றனர். 

.............................. தொடரும் ......................................  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக