ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

தமிழமுது –262– தொல்தமிழர் இசை மரபு:122...பண்சுமந்த பாடல்கள்.

 தமிழமுது –262– தொல்தமிழர் இசை மரபு:122 நீட்சியும் -  வீழ்ச்சியும்ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

இசைமரபு - எழுச்சி ; பக்தி இலக்கியங்கள்பண்சுமந்த பாடல்கள். 

ைவம் தழைத்து 

திருநாவுக்கரசரையும் திருஞான சம்பந்தரையும் தலைவராகக்கொண்ட வைதிகச் சைவமே தமிழகத்தில் தழைத்ததுதிருநாவுக்கரசர்திருஞான சம்பந்தர்சுந்தரர்மாணிக்கவாசகர் என்னும் இந்நால்வரே சைவசமய குரவர்கள் ; தேவாரம்பாடிய முதல் மூவரும் “மூவர் முதலிகள் என்றும் பெயர் பெற்றனர்இவர்கள் நால்வரும் இல்லையேல் சைவசமயமே நிலைத்திருக்க வழியில்லை என்பதைப் பின்வரும் பாடல் விளக்குகிறது . 

“ சொற்கோவும் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும்   

சிற்கோல வாதவூர்த் தேசிகரும் - முற்கோலி   

 வந்திலரேல் நீறெங்கே மாமறை நூல் எங்கே   

எந்தை பிரான் அஞ்செழுத்து எங்கே.”   

பன்னிரு திருமுறைகள்: 

ேவார ஆசிரியர்கள் மூவரும் பாடிய பாடல்களில் தொகை 1,03,00 என்பர்ஆனால் ப்போது கிடைத்திருப்பவை 8250 பாடல்களாகும் 

திருஞான சம்பந்தரின்  பாடல்கள் முதல் மூன்று திருமுறைகள். 

ிருநாவுக்கரசரின் தேவாரப்பாடல்கள்நான்குஐந்து ஆறு திருமுறைகள்  

சுந்தரர் பாடல்கள் ஏழாம் திருமுறை  

ாணிக்கவாசகரின் திருவாசகம்திருக்கோவையார் இரண்டும் எட்டாம் திருமுறை .  

திருமாளிகைத்தேவர்சேந்தனார்கருவூர்த்தேவர்பூந்துருத்திநம்பிகாடநம்பிகண்டராதித்தர்வேணாட்டடிகள்திருவாலியமுதனார்புருடோத்தமநம்பிசேதிராயர் அருளிய பாடல்களைத் திருவிசைப்பாதிருப்பல்லாண்டு என்னும் பெயருடன் ஒன்பதாம் திருமுறை 

ிருமூலரின் மூவாயிரம் திருமந்திரங்கள்பத்தாம் திருமுறை.  

 திருவாலவாயுடையார்காரைக்காலம்மையார்ஐயடிகள் காடவர்கோன் நாயனார்சேரமான்பெருமாள் நாயனார்நக்கீரத்தேவர்கல்லாடனார்கபிலதேவர்பரணதேவர்இளம்பெருமான் அடிகள்அதிராஅடிகள்பட்டினத்துப்பிள்ளையார்நம்பியாண்டார்நம்பிகள் ஆகிய பன்னிருவர் அருளிய நாற்பது பிரபந்தங்களைப் பதினொன்றாம் திருமுறை.  

முதலாம் இராசராச சோழனின் (கி.பி.985 - 1014) விருப்பத்திற்கிணங்க திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையாரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் என்பவரால் திருப்பாடல்கள் ஒழுங்கு டுத்தப்பட்டுப் பதினொரு திருமுறைகளாக வகுக்கப்பட்டன.ந்திரங்கள் பதினொன்றாகலின் திருமுறைகளும் பதினொன்றாயின என்பர் 

சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணமாகிய பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாக இணைக்கப்பட்டத 

பன்னிரு திருமுறைகளும் திராவிட வேதம் என்றும் கூறுவர். 

.....................................................தொடரும் .....................................  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக