வியாழன், 8 அக்டோபர், 2020

தன்னேரிலாத தமிழ் - 162

 

தன்னேரிலாத தமிழ் - 162

554

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.

செங்கோல் வளைய  அறனழிந்த செயல்களைச் செய்யும் மன்னன்.  குடி மக்கள் பழிதூற்ற. வளமிழந்து நாடு நலியக் குற்றங்கள் பெருகிக் கொற்றம் சிதையும்.

ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின் கைக்

கொள்ளி கொடுத்து விடல். ”--- பழமொழி

ஒழுக்கம் இல்லாதவரிடம் உயர்ந்த முதன்மைப் பதவியைக் கொடுத்தல், குரங்கின் கையில் கொள்ளிக் கட்டையைக் கொடுத்தலோடு ஒக்கும்.


கொடிய வறுமை சூழ்ந்த வாழ்க்கையைவிடக் கொடுமையானதாகும்.

“” குடிகொன்று இறை கொள்ளும் கோமகற்குக் கற்றா

மடிகொன்று பால் கொளலும் மாண்பே குடிஓம்பிக்

கொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே மாநிதியம்

வெள்ளத்தின் மேலும் பல.” --- நீதிநெறி விளக்கம்.


தன் குடிமக்களைப் பெரிதும் வருத்தி வரி வாங்கும் வேந்தனுக்குக் கன்றினை உடைய பசுவின் மடியை வருத்திக் கன்றுக்குப் பால் விடாமல் கறத்தலும் நல்ல செயலே ; அப்படி வருத்தி வரி வாங்கினாலும் அவனிடம் செல்வம் சேர்ந்திருப்பது இல்லை , மாறாகக் குடிமக்களை நல்ல முறையில் பாதுகாத்து முறையாக வரி வாங்கும் வேந்தனுக்கு, வெள்ளத்தைவிடப் பல மடங்கு பெருமை பொருந்திய செல்வம் சேரும்.

1 கருத்து: