திங்கள், 19 அக்டோபர், 2020

தன்னேரிலாத தமிழ் - 165

 

தன்னேரிலாத தமிழ் - 165

546

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉம் கோடாது எனின்.

 ஓர் அரசனுக்குப் போர்க்களத்தில் வெற்றி தருவது வேல் அன்று ; அவனுடைய வளையாத செங்கோலே. வளையாத செங்கோல் பெறும் சிறப்பு உணர்த்தப்பட்டது.

ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்

 திங்கள் அனையை எம்மனோர்க்கே”.புறநானூறு, 59.

வேந்தே.. ! நின் பகைவர்க்கு வெப்பம் நீங்காது தோன்றும் கதிரவனைப் போன்றவன் ; எம்போன்று நின் அருள் பெற்றோர்க்குக் குளிர் நிலவைப் போன்றவன் நீயே…!

1 கருத்து: