திங்கள், 6 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –339.

 

தன்னேரிலாத தமிழ் –339.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில். – குறள்.394.

 

உங்களிலே யானொருவன் ஓம்பேனோ இவ்வேனோ

திங்கள் குலனறியச் செப்புங்காள்சங்கத்துப்

பாடுகின்ற முத்தமிழ் என் பன்னூலும் ஏற்குமோ

ஏடவிழ்தார் ஏறெழுவீர் இன்று………….

 

தமியேன் பைந்தமிழ் அன்னையின் பாலருந்தித்

தவழ் பாலன்

தமிழ் வளர உயிர்வாழும் ஊழியன் என்று

உலகறியும்

தமிழரசி அங்கயர்க்கண் உமையன்னையே

தயவில்லையோ

தமியேனுக்கும் இதில் அமர இடமில்லையோ

தகவில்லையோ……(தமியேன்)

 

தருணம் வந்து எனை ஆளாய் சரணடைந்தேன்

இனித் தாளேன்

வரமருள்வாய் சபை நடுவே வரும் இழி

உந்தனைச் சாரும்……….. (தமியேன்)

குளிர்ந்த முகமெனும் இன்சொலும் கார்முகில்

போல்கொடையும்

தெளிந்த அறிவும் நிறை பணியாக அணிசீனக்கனை

மிளிர்ந்த பல்கலைவாணர் வந்தடைவதில்

விந்தை என்னே

அளித்த பலாக்கனி ஈக்களை வாவென்று

அழைப்பதுண்டோ..?

----கவிஞர் பாபநாசம் சிவன், படம் : சிவகவி, 1943.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக