செவ்வாய், 21 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

 

தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

................2................

அல்குல் கண் தோள்

என மூன்றும் பெருத்து

நுதல் அடி நுசுப்பு

என மூன்றும் சிறுத்து

இன்னிசை யாழின்

செவ்வழிப் பண்ணேயன்ன

பெண்ணே….!

காரிருள் விளக்கு போல்

கண்கள் ஒளி விச

காமக் குறிப்பின்

கலங்கரை விளக்கமாய்

மேகலையும் சிலம்பும்

மெல்லவே புலம்ப

அன்னமேநீ

அடியெடுத்து வாராய்..!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995.

2 கருத்துகள்: