சனி, 4 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –337.

 

தன்னேரிலாத தமிழ் –337.

நனவினான் நல்காக் கொடியார் கனவினால்

என்எம்மைப் பீழிப் பது.-குறள்,1217.

 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி

இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி

மங்கையென் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி

வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி

அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்துவிட்டார் தோழி (மாலை)

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி

கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி

இளமையெல்லாம் வெறும் கனவுமயம் இதில் மறைந்தது சில காலம்

தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம். (மாலை)”

--கவிஞர் கண்ணதாசன், படம்: பாக்யலஷ்மி,1961.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக