செவ்வாய், 11 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :589
ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும். --- ௮௯
ஒற்றறிய மூன்று ஒற்றர்கள் ஒருவரை ஒருவர் அறியாவண்ணம் ஒற்றறிதலில் ஈடுபடவேண்டும் அவ்வாறு ஒற்றரர்கள் அறிந்துவந்து சொல்லிய செய்திகள் ஒன்றுபோல் இருக்குமானால் அஃது உண்மை என்று தெளிய வேண்டும்.
“ நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.” – இனியவை நாற்பது.

தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக