வெள்ளி, 21 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :599

திருக்குறள் – சிறப்புரை :599
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.----- ௯௯
யானை. வலிமையான பருத்த உடலோடு கூர்மையான கொம்புகளுடன் இருப்பினும் உருவத்தைக் கண்டு அஞ்சாது ஊக்கமுடன் புலி தாக்கினால் யானையே அஞ்சும்.
“ யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
 நீல்நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்
சூல் மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை.” பெரும்பாணாற்றுப்படை.
யானை தாக்கவந்தாலும் தன்மேல் பாம்பு ஊர்ந்து சென்றாலும் பெரிய இடி இடித்தாலும் கருவுற்ற பெண்கூட இவற்றுக்கெல்லாம் அஞ்சமாட்டாள் அத்தகைய இயல்பு உடையவர்கள் குறிஞ்சி நில மறக்குடியினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக