புதன், 19 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :597

திருக்குறள் – சிறப்புரை :597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப்பா டூன்றும் களிறு.--- ௯௭
யானை தன் உடம்பில் அம்பு புதைந்தபோதும் தன்னிலையில் தாழாது தன் பெருமையை நிலை நிறுத்தும் அதுபோல் தாழ்வு வந்துற்றபோதும் ஊக்கம் உடையார் நிலை குலைய மாட்டார்கள்.
“ நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார்…..” பழமொழி.

செய்ய வேண்டியதைச் செய்துமுடிக்கும் துணிவுடையார் அஞ்சத்தக்க வினைகள் எது வந்தாலும் அஞ்சமாட்டார்கள்.

1 கருத்து: