ஞாயிறு, 13 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-195.

 

தன்னேரிலாத தமிழ்-195.

கொலை உண்கண் கூர் எயிற்றுக் கொய் தளிர் மேனி

இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார்

நில உலகத்து இன்மை தெளி….” –கலித்தொகை, 108.

கொலைத் தொழிலை உடைய மையுண்ட கண்ணையும்; கூரிய எயிற்றினையும் ; தளிர்போன்ற மேனியையும்; கண்டார் வருத்தும் அழகினையும்; உடைய மாயோளே..! நின்னைக்காட்டிலும் அழகில் சிறந்தார் மண்ணுலகத்து இல்லை என்பதை,  நீயே தெளிவாய்..! –தலைவன் கூற்று.

1 கருத்து: