செவ்வாய், 15 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-196.

 

தன்னேரிலாத தமிழ்-196.

செல்வம் கடைகொளச் சாஅய் சான்றவர்

அல்லல் களைதக்க கேளிருழைச் சென்று

சொல்லுதல் உற்று உரைக்கல்லாதவர் போலப்

பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின்

மெல்ல இறைஞ்சும் தலை. “ ----கலித்தொகை, 61.

அறிவுடையோர், தம் செல்வம் தீர்ந்துவிட, வறுமையடைந்து துன்புற்றுத் தம்முடைய வருத்தத்தைக் களைதற்குரிய தக்க உறவினரிடத்தே சென்று தம் குறையை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கிப் பின்னர் அதனை  முழுதும் சொல்ல இயலாது, ,தயங்கி நிற்பாரைப் போல, இவனும் நின்றனன் ; தான் கூறக் கருதியதனைக் கைவிட்டுப் பலமுறையாகப் பார்க்கும்; பின்னை யான் அவளைப் பார்க்கின் அவள் மெல்லத் தலை இறைஞ்சி நின்றனள், என்றாள். –தோழி, தலைவிக்குக் கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக