புதன், 16 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-197.

 

தன்னேரிலாத தமிழ்-197.

உள்ளிக் காண்பென் போல்வல் முள் எயிற்று

அமிழ்தம் ஊறும் செவ்வாய்க் கமழ் அகில்

ஆரம் நாறும் அறல்போல் கூந்தல்

பேரமர் மழைக்கண் கொடிச்சி

மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.” ---குறுந்தொகை, 286.

முள்ளைப்போன்ற கூரிய பற்களையும்;  அமிழ்தம் ஊறுகின்ற அழகிய செவ்விய  வாயையும்;  மணம் வீசுகின்ற அகிற்புகையும் சந்தனப்புகையும் மணக்கின்ற கருமணலைப்போலக் கரிய கூந்தலையும்;  பெரிய அமர்த்த கண்களையும்; உடைய தலைவியின்  புன்னகையோடு, செருக்கின பார்வையை, நினைத்துப் பார்ப்பேன் போல்வேன். –தலைவன் கூற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக