செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-228.

 

தன்னேரிலாத தமிழ்-228.

உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்

கொண்டு புகல்வது அவர் குற்றமேவண்டுமலர்ச்

சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ

காக்கை விரும்பும் கனி.” நன்னெறி, 24.

செழிப்பான சோலையில் மலர்களில் தேன் அருந்துவதை வண்டுகள் விரும்பும் ; காக்கை வேப்பம் பழத்தை விரும்பும் ; அதுபோல, உலகில் ஒருவருக்கு நல்ல குணம் இருந்தால் உயர்ந்தோர் அவரின் நல்ல குணத்தையே பேசுவார்கள் ; ஆனால், தீயவர்கள் நல்லவர்களிடம் காணப்படும் குற்றம் எதுவென்று ஆராய்ந்து அதனையே பேசிக் கொண்டிருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக