செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-232.

 

தன்னேரிலாத தமிழ்-232.

பொன்னும் கரும்பும் புகழ்பாலும் சந்தனமும்

சின்னம்பட வருத்தம் செய்தாலும் முன்னிருந்த

நற்குணமே தோன்றும் நலிந்தாலும் உத்தமர்பால்

நற்குணமே தோன்றும் நயந்து.”நீதிவெண்பா, 65.

பொன், கரும்பு, பால், சந்தனம் ஆகியன எவ்வளவு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் அவற்றின் இயல்பான ஒளி, இனிமை, சுவை, மணம் எனும் பண்புகளே மீண்டும்  மிகுந்து நிற்கும். அவ்வாறே நல்லோர் பிறரால் எவ்வளவு துன்புற்றாலும் அவர்களுடைய நல்ல பண்புகள் மாறுவதே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக