ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-241.

 

தன்னேரிலாத தமிழ்-241.

அனைத்தையுந் தோற்றனை அருவிபாய்  கவுள்

சினக் களி மால் களிறனைய சீற்றத்தோய்

மனத்திடை நினைக்குவது என்னை வல்லைநின்

புனக்கொடிக்கு இயைந்து இனிப் பொருதும் யாம் என்றான்.-நைடதம், ..

 நளனே…! அனைத்தையும் சூதாடித்  தோற்றுவிட்டாய், மலையருவியானது பாயும் கபோசலத்தை உடையவனே, சினம் கொண்ட பெருமை பொருந்திய  யானையை ஒத்த தோற்றத்தினை உடையோய்…!  இனியும் நீ மனத்தில் நினைக்குவது என்னை  ?  விரைந்து வா ..உன் மனையாளைப் பணையமாக வைத்துச்  சூதாடுக என்றான் புட்கரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக