வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-239.

தன்னேரிலாத தமிழ்-239.

மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிதே

தானம் அழியாமைத் தான் அடங்கி வாழ்வினிதே

ஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருளுடைமை

மானிடவர்க் கெல்லாம் இனிது.”இனியவைநாற்பது, 40.

மாந்தர்க்கு உயிரினும் சிறந்த மானம் போனபின் வாழாமை இனிது ; தன் நிலையில் தாழாமல் அடக்கம் உடையவராய் வாழ்தல் இனிது ; எக்குறையும் இல்லாது உயர்ந்த செல்வராய் வாழ்தல் எல்லார்க்கும் இனிது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக