திங்கள், 22 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-242.

 

தன்னேரிலாத தமிழ்-242.

கள்ளுண விரும்புதல் , கழகம் சேர்தல், மால்

உள்ளுறப் பிறன்மனை நயத்தல் ஒன்னலர்க்கு

எள்ளரும் ஞாட்பினுள் இரியல் செய்திடல்

வள்ளியோய் அறநெறி வழுக்கும் என்பவே.” –நைடதம், ..

 அரசனே…! கள் குடித்தலை விரும்புதலும் சூதாடும் இடம் சேர்தலும் உள்ளம் மயக்கமடைய பிறர் மனையாளை விரும்புதலும் பகைவர்களுக்கு அஞ்சி இகழ்ச்சியில்லாத போர்க்களத்தில் பின்னிட்டு ஓடலும் ஆகிய இவைகளால்  அறநெறி பிறழும் என்பர் பெரியோர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக