திங்கள், 12 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…78.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…78.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

”சினம் காக்க.

“உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினங்காத்துக்

கொள்ளும் குணமே குணம் என்க – வெள்ளம்

தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து

விடுத்தல் அரிதோ விளம்பு.”

வெள்ளம் புகுந்து ஊரை அழித்துவிடாமல் கரையை வலுவாகக் கட்டி காத்தல் அரிய  செயலாகும்; ஒரு சிலர் நலன் காக்கக் கரையை உடைத்தல் எளிய செயலாகும். அதுபோல,   எதற்கெடுத்தாலும் சினம் கொள்ளுதல் நல்ல குணம் அல்ல ; உயிரை மாய்க்கும் தன்மையுடைய  சினம் கொள்ளாமல்  அடக்கிக் கொள்ளும் குணமே  நற்குணமாகும்.

 

”வெல்வது வேண்டின் வெகுளாதான் நோன்பு இனிதே”- இனியவை நாற்பது: 24.

எடுத்த செயலில் வெற்றி பெற வேண்டின் எவரிடத்தும் சினம் கொள்ளாத உள்ள உறுதி மிக இனிதே,.

மனிதனாய் இரு, எந்நிலையிலும் சினம் கொள்ளாதே.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக