புதன், 25 மார்ச், 2026

தமிழமுது –245– தொல்தமிழர் இசை மரபு:105 நீட்சியும் - வீழ்ச்சியும். மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 2.

 தமிழமுது –245– தொல்தமிழர் இசை மரபு:105 நீட்சியும் -  வீழ்ச்சியும் 

                              மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 2. 

 

இசைக்கருவிகள் 

இசைக்கருவிகள் தோல்துளைநரம்புவெண்கலம், (கஞ்சம்என நால்வகைப் பட்டிருந்தனதோற்கருவிகள் ஆடல்முழாபாடல் முழா,பொது முழா என்றும் ; அகமுழவுஅகப்புறமுழவுபுறமுழவு,  புறப்புற முழவுபண்ணமை முழவுநாள் முழவுகாலை முழவு என்றும் ; மணப்பறைபிணப்பறை என்றும் வகுக்கப்பட்டிருந்தனபறை என்பது தோற்கருவிப் பொதுப் பெயர். “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை ” (தொல்.964). 

 இன்னிசைத் துளைக்கருவிகள் புல்லாங்குழல் இசைக்குழல் (நாதசுரம்), முகவீணை என்னும் ஏழிசைக்  குழல்களகவும் ; இருவகைப்பட்டிருந்தன. தாரைசின்னம்வாங்காகொம்பு சங்கு முதலிய ஓரிசைத் துளைக் கருவிகள்ஊர்வலம்போர் முதலிய நிகழ்ச்சிகளில் ஆரவார இசைக்கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டனமகுடி என்பது பாம்பை மயக்குதற்கென்றே அமைக்கப்பட்ட ஏழிசைச் சிறப்பின்னிசைக் ுழலாகும் 

 

நரம்புக் கருவிகள் ஒரு நரம்புள்ள சுரையாழிலிருந்து ஆயிரம் நரம்புகள் பெருங்கலம் (ஆதி யாழ்வரை பல்வேறுவகைப்பட்டிருந்தனஅவற்றுள் ேரியாழ்மகர யாழ்சகோட யாழ்செங்கோட்டி யாழ் ன்னும் நான்கும் சிறந்தவை. அவற்றுள்ளும் தலைசிறந்தது செங்கோட்டியாழ்அதுவே பின்னர் வீணையாகத் திரிந்ததுஆயிரம் நரம்பென்பதுஆயிரங்காற் பூச்சி என்பதிற்போல்நரம்பின் பெருந்தொகையையே குறிக்கும்.. 

.......... தொடரும்.............................................................  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக