ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----123

 

தன்னேரிலாத தமிழ்----123

தமிழ் வளமையான மொழி; தொன்மை வாய்ந்த மொழி ; நான் மனதாரச் சொல்கிறேன். இந்தியாவின் வளமையைப் பறைசாற்றுவதற்குத் தமிழ் மொழியைக் குறிப்பிடலாம்” – தலைமை அமைச்சர் திரு நரேந்திர மோடி அவர்கள்.

 

                      ஆரிய நாகரிகத்தினும் தமிழ் நாகரிகம் பன்னூறு மடங்கு பழைமை யுடையது என்பதைச் சேர சோழ பாண்டியராகிய மூவேந்தரது தொடக்கற்ற பழம்பெருமையே காட்டும். திருக்குறளில்பழங்குடிஎன்னும் தொடரை விளக்குகையில் பரிமேலழகர் சேர சோழ பாண்டியரென்றாற் போலப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்ட குடிஎன்று கூறுவது காண்க.” –    

                                                       --பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை.

                    தொல்தமிழர்தம் அறிவாற்றலில் விளைந்த அற்புதக்கலை ஓகம். இக்கலை மிகவும் தொன்மையானது. சிவனை முதன்மையாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை உடற்கூறுகளை உய்த்துணர்ந்து இன்றைய அறிவியல் வியக்கும் வண்ணம் வாழ்வியலை வளப்படுத்துகிறது. சிந்துவெளித் தமிழரிடம் சிறந்தோங்கி இருந்ததற்கான அகழாய்வுச் சான்றுகள் கிடைத்துள்ளன. இக்கலை ஆரியர்கள் வருகைக்கு முன்பே தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருந்தது.

ஓகக் கலை

                        இன்றைய அறிவியல் வியக்கும் வண்ணம் வாழ்வியலை வளப்படுத்தும் ஓகக் கலை, சிந்துவெளித் தமிழரிடம் சிறந்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இஃது ஆரியர் வருகைக்கு முன்பே தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருந்தது.

 

 Yoga: The Health Mantra…. By -  Govind Rawat

                   “ The history of Yoga may go back anywhere from five to eight thousand years, depending on the perspective of the historians. It evolved wholly in the land of  India and while it is supposed by some scholars  that yogic practices  were originally the domains of the indigenous , non – Aryan ( and pre – vedic ) peoples, it was first  clearly expounded in the great vedic shastras ( Religious) .”    

               “ Pre – vedic findings  are taken, by some commentators, to show that ‘ yoga’ existed in some form  well before the establishment  of Aryan culture in the north Indian subcontinent .

A triangular amulet seal uncovered  at thae Mohenjo- daro archaeological     excavation site depicts a male, seated on a low platform in a cross-legged position, with arms outstretched .” p.30. 

சனி, 8 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----122

 

தன்னேரிலாத தமிழ்----122

புற அறிவியல்

மனித சமுதாயத்தின் புறத்தேவைகளைப் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் இயக்கி வருவது.  புற அறிவியலில் நிலையான கண்டுபிடிப்பு என்று எதுவும் இல்லை ; இன்றைய கண்டுபிடிப்புகள் நாளை வழக்கொழிந்து விடுகின்றன. புற அறிவியலின் அசுரத்தனமான வளர்ச்சி  இயற்கையின் இயல்பை மாற்ற முயல்கிறது

இயற்கை, செயற்கையாகிய  அறிவியலால் சிதைக்கப்படுகிறது. இன்று புற அறிவியல்  அனைத்து உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. வானும் மண்ணும் நிலமும் நீரும் வளியும் வாழ்வும் இன்று மாசடைந்துள்ளன

இயற்கையின் மீது புற அறிவியல் தொடுத்த ஆதிக்கப் போர்,  உயிரினங்களைப் பேரழிவை நோக்கிச் செலுத்துகிறது. உலக உருண்டை உள்ளங்கையில் வந்துள்ளது என்னவோ உண்மைதான். ஆனால் வானூர்தியோ, கைப்பேசியோ இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ; ஒழுக்கமின்றி வாழ்தலாகாது.


வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----121

 


                               

தன்னேரிலாத தமிழ்----121

அக அறிவியல்:

                                   மனித சமுதாயத்தின் அகவாழ்க்கைச் சார்பானது

மண்ணில் நல்ல வண்ணம் மக்கள் வாழ்வதற்கான நெறிமுறைகளைக் கூறுவது; இப்படித்தான் வாழவேண்டும் என்பதை வரையறுத்துக்கூறுவது.

பிறப்பால் பேதமுறாது; வளர்ப்பால் வழி தவறாது; இல்லறத்தால் உறவு மாறாது..!

  யாதும் ஊரென யாவரும் உறவென இயற்கையோடியைந்து வாழ வற்புறுத்துவது.

 வளமான வாழ்க்கை நலமுடன் விளங்க ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாக அனைத்து உயிர்களும் இயற்கை அன்னையின் மடியில் இன்புற்று இயைந்திருக்கஇயங்க அறம் பல வகுத்துரைப்பது.

                             அக அறிவியலின் அடிப்படை ஒழுக்கமுடைமையே. ஒழுக்கமின்றி மனித சமுதாயம் வாழமுடியாது ; வாழவும் கூடாது இஃது எக்காலத்திற்கும் பொருந்தும் அறிவியலாகும். ஒருவன் ஒருத்தி எனும் கற்பொழுக்க வாழ்க்கைமுறைப் புற அறிவியல் வளர்ச்சியால் புறந்தள்ளமுடியாத அக அறிவியலாம்.

                                பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் தனிமனிதத்தன்மை சார்ந்தும் சமுதாயம் சார்ந்தும் வாழ்வியலின் அனைத்து நிலைகளையும் அறிவியல் நோக்கில் ஆராய்ந்து எடுத்துரைப்பதே அக அறிவியலாம்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்---120

தன்னேரிலாத தமிழ்---120

     இமயம்

வடதிசை யதுவே வான் தோய் இமயம்

                  கழை வளர் இமயம் போல- 166

மூங்கில் வளரும் இமயம் போல

ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்

தென்அம் குமரியொடு ஆயிடை

மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே

                                         குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 11: 23 – 25

ஆரியர் உறையும் அமைதி நிறைந்த இமயமலைக்கும் தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள்

செருக்கித் திரிவோரைப் போரிட்டு அழித்து  வென்றவனே. ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் )

கங்கை யாறு

வளமழை மாறிய என்றூழ்க் காலை

மன்பதை எல்லாம் சென்று உண கங்கைக்

கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு

                                            பெருஞ்சித்திரனார், புறநா.161 : 5 - 7

மழை நீங்கிய கோடைக் காலத்தில் மன்பதை எல்லாம் சென்று நீருண்ணற்குக் காரணமான கங்கை பெரு வெள்ளத்தைப் போல ...

கங்கையை ஏன் பாடினார் ?

வட இமயம் தென் குமரி

 ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்

அமைதி நிறைந்ததும் முனிவர்கள் நிறைந்து விளங்கும்  பெரும் புகழ் உடையதுமான இமய மலைக்கும்தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள்செருக்கால் தம்மை உயர்த்திக் கூறிக் கொள்பவர்களுடைய வீரம் அழியுமாறு அவர்களோடு

தென் அம் குமரியொடு ஆயிடை

மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.

   குமட்டூர்க் கண்ணனார். பதிற்.11:  23 - 25

எதிர்நின்று பொருது வென்றாய். பண்டைய தமிழ்நாட்டின் எல்லை அறிக.


புதன், 5 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்---119

தன்னேரிலாத தமிழ்---119

தொல் தமிழர் வானியல் அறிவு

 நிலமும் பொழுதும் ( Time and Space )

என்றூழ் உறவரும் இரு சுடர் நேமி

ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும்

நப்பண்ணனார் பரிபா. 19 : 46 – 47

திருப்பரங்குன்றத்துத் தெளிந்த ஓவியம் வரைந்து நிற்றலையுடைய மாடத்தின்கண் சென்றாராக -  சிலர் .நாண்மீன்களையும் தாரகைகளையும் உடைய சுடர்ச் சக்கரத்தைக் கண்டுஞாயிறு முதலாக வரும் கோள்களினது நிலைமைய விளக்கிஆண்டுத் தீட்டப்பட்ட ஓவியத்தைக் கண்டு உணர்ந்து கொள்வர். ( இவ்வாறு ஞாயிறு முதலாகப் பொருந்த இயங்கும்பண்டைக் காலத்துத் தமிழ்ச் சான்றோர் வானின்கண் உள்ள நாள் கோள் முதலியவற்றை ஆராய்ந்துஅவற்றைப் பொது இடங்களிலே ஓவியமாகவும் வரைந்துமாந்தர்க்கு அறிவுறுத்தி வந்தமை உணரப்படும்.மேலும் ஓவியங்கள் வாயிலாய் மக்களுக்கு இதிகாச முதலியவற்றையும் உணர்த்தியமை அறிக.)     

 

என்றூழ்ஞாயிறு, நாண்மீனும் பிற மீனுமாகிய இருவகை மீன்களும். ஞாயிறு முதன்மையாகப் பொருந்த இயங்கும். இவ்வடிகளானே பண்டைக் காலத்துத் தமிழ்ச் சான்றோர் வானின்கண் உள்ள நாள், கோள் முதலியவற்றை ஆராய்ந்து அவற்றைப் பொதுவிடங்களிலே ஓவியமாகவும் வரைந்து மாந்தர்க்கு அறிவுறுத்தி வந்தமை உணரப்படும். நாள் மீன்களையும் விண்மீன்களையும் உடைய சுடர்ச் சக்கரத்தைப் பொருந்தி ஞாயிறு முதலாக வரும் கோள்களினது நிலைமையை விளக்கி ஆண்டுத் தீட்டப்பட்ட ஓவியங்களைக் காண்பர்

 

நிலமும் பொழுதும் ~ தொல்காப்பியம்

மக்கள் வாழ்க்கை முறைகளை அடிப்படையகக் கொண்டு நிலமும் பொழுதும் பகுக்கப்பட்டுள்ளன  தொல்காப்பியரின் நிலம் பொழுது பற்றிய கருத்துகள் அறிவியலுக்குப் பொருந்துவதாகவே உள்ளன.

நிலப் பகுப்பு

அவற்றுள்

நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்

 படுதிரை வையம் பாத்திய பண்பே.  தொல். 19: 2

முற்கூறிய ஏழு திணைகளுள் நடுவில் இருக்கும் குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் என்ற ஐந்திணைகளுள் பாலை நீங்கலாகக் கடலால் சூழப்பெற்ற இந்நிலவுலகத்தைப் பகுத்துக்கொண்டனர் என்பார்.

தொல்காப்பியர்  தமிழ் நிலப்பரப்பை நான்கு வகையாகப் பகுத்துள்ளார்.

1.   காடுறை உலகம்முல்லை

2.   . மைவரை உலகம்  - குறிஞ்சி

3.    தீம்புனல் உலகம்மருதம்

4.   பெருமணல் உலகம்  -  நெய்தல்

இப்பாகுபாடு அவ்வவ்நில இயற்கை வளங்களை அடிப்படையாக் கொண்டவையாகும்.


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்---118

தன்னேரிலாத தமிழ்---118

உறைஒற - Hora – Hour

செறு வினை மகளிர் மலிந்த வெக்கை

பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்

அம்பண அளவை உறை குவிந்தாங்கு

அரிசில் கிழார் . பதிற். 71 : 3 - 5

வயலில் விளைந்த நெல்லை மகளிர் அறுத்துமிக நெருங்கிய காடாவிடும் களமாகிய போரடிக்கும் நெற்களத்தில் சேர்ப்பர். அவற்றைப் பருத்த எருமைகளால் மிதிக்கச் செய்து செந்நெல்லை மரக்காலால் அளத்தற்  பொருட்டுக் குவித்து வைப்பர்.  (  அம்பணம்மரக்கால் ; அம்பண அளவை உறைஅறுபது மரக்கால்ஓர் உறை ; அக் குவியலைப் பொலி என்பர். இந்த அறுபது அலகு கொண்ட உறைதிரிந்து ஒறஓறாஹவர்  என்று மணியைக் குறித்ததாகப்  புள்ளி என்னும் என் ஆய்வுக் கட்டுரையில் சுட்டியுள்ளேன் - கண்டு தெளிக. )

கை விடுப்புதம் கையினின்று பிறருக்கு விடுத்தல்கைமாற்று என்பர். பசு தரும் பயன் பெற்று வாழ்பவர் ஆயர்அவர்களின் தலைவன் கழுவுள்ஊர்- காமூர்இது பதினான்கு குடி வேளிரால் அளிக்கப்பட்டதென்றும் கூறுவர்-