செவ்வாய், 8 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 376

திருக்குறள் – சிறப்புரை : 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. – 376
ஆகூழின்றி எவ்வளவுதான் முயன்று விரும்பிப் போற்றினும் செல்வம் நில்லாது தொலைந்துவிடும் ;  ஆகூழால் வந்து சேர்ந்த செல்வத்தை வேண்டாமென்று வெளியே கொட்டினும் அது நம்மை விட்டுப்போகாது .
“ தாம்செய் வினையல்லால் தம்மொடு செல்வது மற்று
யாங்கணும் தேரின் பிறிதில்லை…. – நாலடியார்

எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் இறந்தபின் தம்முடன் வருவது தாம்செய்த நல்வினை தீவினைகளின் பயனைத் தவிர வேறொன்றுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக