புதன், 30 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 396

திருக்குறள் – சிறப்புரை : 396
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. – 396
மணற்கேணியில் தோண்டுந் தோறும்  நீர் ஊற்றெடுத்து பெருகுவதைப் போல;  மாந்தர்,  நல்ல நூல்களைக் கற்குந் தோறும் அறிவு பெருகும்.
“ பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
 கற்றலின் காழ் இனியதில்” – இனியவை நாற்பது.

பற்பல நாளும் வீணே கழியாது, பயனுள்ள நூல்களைக் கற்பதைப்போல் இனிமை உடையசெயல் வேறு எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக