சனி, 12 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 380

திருக்குறள் – சிறப்புரை : 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – 380
 ஊழைவிட வலிமை உடைய வேறு எதுவும் உளதோ..?
அதனை விலக்கி முன்னேற முயன்றாலும் அதுவே முன்வந்து நிற்கும். பழவினையின் ஆற்றல் உணர்த்தினார் என்க.
”செய்வினை வழித்தாய் உயிர் செலும் என்பது
பொய்யில் காட்சியோர் பொருள் உரை “ – சிலம்பு.

 முன் செய்த வினையின்வழி உயிர் சென்று சேரும் என்பது பொய்யுரை அறியாச் சான்றோர் கூறிய உண்மையாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக