சனி, 5 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 373

திருக்குறள் – சிறப்புரை : 373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும். – 373
சான்றோர்அருளியஅறிவுசெறிந்த நூல்களைக் கற்றுத்தேறினும் தீவினையானது கற்றறிந்த அறிவால்  தெளிவிபெற  விடாது , இயல்பான அறிவே மேலெழுந்து செயல்படும்.
” நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம்…”
                  கணியன் பூங்குன்றன், புறநா. 192: 9 – 11
ஆற்று நீரில் மிதந்து செல்லும் தெப்பம்போல, வாழ்க்கையும் ஊழின் வழியே செல்லும் என்பதைச் சான்றோர் கூற்றால் தெரிந்துகொண்டோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக