ஞாயிறு, 27 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 393

திருக்குறள் – சிறப்புரை : 393
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். – 393
கண் உள்ளவவர்கள் என்று சொல்லத்தகுந்தவர்கள் எண்ணும் எழுத்தும்    கற்றவர்களே ; கல்லாதவர் முகத்தில் உள்ளவை கண்கள் அல்ல, புண்களே.
அறிவை வளர்த்துக்கொள்ளவே கண்களைப் பெற்றுள்ளோம்  ; கண்ணொளி – அறிவொளி.
“ பிச்சை புக்கு ஆயினும் கற்றல் மிகவும் இனிது.”  -- இனியவை நாற்பது.

 பிச்சை எடுத்தாவது கல்வி கற்றல்  மிகவும் நன்றே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக