திங்கள், 21 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 387

திருக்குறள் – சிறப்புரை : 387
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு. – 387
 குடிமக்கள் போற்றுமாறு இனிய சொற்களை உவந்து கூறும் இயல்புடைய மன்னனுக்கு  அவன் விரும்பியவாறு எல்லா நலன்களும் கொண்டதாக இவ்வுலகம் அமையும்.
“ அலத்தல் காலை ஆயினும்
 புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே.” – புறநானூறு.

 உலகமே வறுமையுற்ற காலமாயினும் உயிர்களைப் பாதுகாக்கும் வல்லமையுடையவன் அதியமான், அவன் தாள் வாழ்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக