சனி, 3 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 399

திருக்குறள் – சிறப்புரை : 399
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.- 399
கற்க வேண்டியவற்றை முறையாகக் கற்ற அறிவிற்சிறந்த சான்றோர், கல்வியறிவால் உலகம் இன்புறுவதைக் கண்டு மேலும் தம்அறிவை விரிவு செய்ய விருப்பம் கொள்வர். .
” மாசில் பனுவல் புலவர் புகழ் புல
நாவில் புனைந்த நன் கவிதை.” – பரிபாடல்.

குற்றமில்லாத நூற் கேள்வியினை உடைய நல்லிசைப் புலவர்கள், புகழப்படும் அறிவினை உடைய தம் நாவாலே பாடிய நல்ல செய்யுள்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக