செவ்வாய், 27 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 417

திருக்குறள் – சிறப்புரை : 417
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். 417
நுணுகிநோக்கி நூல்பல கற்றுத் தேர்ந்ததோடு நிறைந்த கேள்வியறிவினை உடையவர்கள் சிலநேரம் பிறழ உணர்ந்தவழியும் தமக்குப் பேதைமை பயக்கும் சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.
“ முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉம்

 கற்றனம் என்று களியற்க …….. “நீதிநெறி விளக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக