ஞாயிறு, 4 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 400

திருக்குறள் – சிறப்புரை : 400
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. – 400
ஒருவனுக்குக் கேடு அடையாத நிலைத்த செல்வம் என்பது கல்வியே ;பொன் பொருள் முதலிய பிற செல்வங்கள் யாவும் நிற்பதுபோல் நின்று அழியும் தன்மையுடையன.
“ எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
    விச்சை மற்று அல்ல பிற..” – நாலடியார்.

ஒருவன் தன் மக்களுக்குச் சேர்த்துவைக்கும்  செல்வம் என்று சொல்லத் தகுந்தது கல்வி கற்றுக் கொடுத்தல் ஒன்றே ; வேறு செல்வம் எதுவும் இதற்கு இணையாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக