புதன், 7 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 402

திருக்குறள் – சிறப்புரை : 402
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று..- 402
கல்லாதவன், சான்றோர் அவையேறி உரையாற்றி அனைவரையும் ஈர்க்க முயல்வது, இரண்டு கொங்கைகளும் இல்லாத ஒருத்தி காம வயப்பட்டு ஆடவரை ஈர்க்க முனைவது போலாம்.
“ அவையஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
 அவையஞ்சா ஆகுலச் சொல்லும் நவையஞ்சி
 ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்
 பூத்தலின் பூவாமை நன்று.” -  நீதிநெறி விளக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக