திங்கள், 19 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 409

திருக்குறள் – சிறப்புரை : 409
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. – 409
கல்லாதார் உயர்ந்த குடியில் பிறந்தவராயினும் அவர்கள்… தாழ்ந்த குடியில் பிறந்து கல்வியறிவில் மேம்பட்டார் எய்திய பெருமைகளைப்  பெற முடியாதவர்களே.
 ( “ உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும்~ உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.” ~~~ பரிமேலழகர்.)
“ நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
  கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே.”
“ எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
  அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்.” …வெற்றிவேற்கை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக