வியாழன், 8 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 403

திருக்குறள் – சிறப்புரை : 403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். – 403
. கற்றறிந்தார் முன்,  ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தால் , கல்லாதவர்களும்  மிகவும் நல்லவர்களே.
“ இரைசுடும் இன்புறா யாக்கையுள் பட்டால்
 உரைசுடும் ஒண்மை இலாரை… - நான்மணிக்கடிகை

நோயுள்ள உடம்பில் சேரும் உணவு செரிக்காமல் துன்புறுத்தும் ; அறிவு இல்லாதவரை அவர்தம் வாய்மொழியே துன்புறுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக