வெள்ளி, 23 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 413

திருக்குறள் – சிறப்புரை : 413
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து. 413
செவிக்கு உணவாகிய கேள்வி வேட்கை உடையவர்கள் நிலவுலகத்திலே வாழ்கின்றவராயினும் அவர்கள். அவி உணவினை உண்டு பேறு பலபெற்றுப் புகழ் பூத்து உயர்ந்த உலகத்தில்  வாழும் சான்றோர்களோடு ஒப்புநோக்கத் தக்கவராவர்.
“கண்ணில் சொலிச் செவியின் நோக்கும் இறைமாட்சி

 புண்ணியத்தின் பாலதே ………  நீதிநெறி விளக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக