திங்கள், 26 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 416

திருக்குறள் – சிறப்புரை : 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 416
செவிமடுத்துக் கேட்பவை சிற்றுரையாயினும் நல்லனவற்றைக் கேட்க ; அஃது ஒருவனுக்கு நிறைந்த பெருமையைத் தரும்.
“ தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை
 அம்மா பெரிது என்று அகம் மகிழ்க தம்மினும்
 கற்றாரை நோக்கிக் கருத்து அழிக கற்றது எல்லாம்

 எற்றே இவர்க்கு நாம் என்று.” ~ நீதிநெறி விளக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக