புதன், 28 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 418

திருக்குறள் – சிறப்புரை : 418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. 418
அறிவாற்றலை வளர்க்கும் சான்றோர் உரைகளால்  துளைக்கப்படாத செவிகள் நன்றாகக் கேட்கும் திறன் உடையவையேயாயினும் அவை செவிட்டுக் காதுகளேயாம் .
நல்லுரைகளை விரும்பிக் கேட்காத செவிகள் செவிகள் அல்லவே.
“ நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம் மிக்க

 நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே…….. வாக்குண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக