திங்கள், 8 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…55.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…55.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்.”

 

பிறந்த பிள்ளைகள் அனைவரும் (நல்ல) பிள்ளகள் இல்லை. குடும்பத்தின் நிலமை அறிந்து,  ”தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை ; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை “ எனும் சான்றோர் அறிவுரையை மனத்தில் கொண்டு, நல்வழி நடந்து, கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கும் பிள்ளைகளே பிள்ளைகள் ஆவர்.

”மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என் நோற்றான்கொல் எனும் சொல்.” –குறள்: 70.

 

பெற்று, வளர்த்து கல்வியறிவு பெறப் பாடுபட்ட பெற்றோர்க்குப் பெருமை சேர்க்கும் வகையில் சிறந்து விளங்கும் மகன், தந்தைக்குச் செய்ய வேண்டிய நன்றியாவது, நல்ல அறிவும் பண்பும் உடைய மகனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்று ஊரார் சொல்லும் சொல்லே மகன் நன்றிக் கடன் ஆற்றும் வழியாம்.

 

பிள்ளைகளே…! பெற்றோர்க்கு எது பெருமை தருமோ அதைச் செய்யுங்கள் அதை மட்டுமே செய்யுங்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக