செவ்வாய், 23 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…65.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…65.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

1) ”இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே”

2) “இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே.”

உண்ணவும் உடுக்கவும், இருக்கவும் ஏதுமில்லா வறுமையுற்றோர் பொருள் உடையவர்களிடம் கையேந்தி  ‘ஏதாவது கொடுங்கள் ஐயா’ என்று கேட்பது இயற்கையே ஆகும்.

வறுமையுடையோர் துன்பத்தைக்கண்டு அவரிடம்  கருணை காட்டிப் பொருட்செல்வம் உடையோர் அவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து உதவுவது செல்வர்தம் கடமையாகும்.

“நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க

படுபனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்.” –சமண முனிவர்கள், நாலடியார்: 10; 6.

பலரும் விரும்பும்படி உதவி செய்து வாழ்கின்றவர்கள் ஊரின் நடுவே மேடை சூழ விளங்கும் பயன் தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக