செவ்வாய், 30 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…67.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…67.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்

தேன் தேர் குறவர் தேயம் நன்றே.”

அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த பெரியோர்கள் இல்லாத இடத் தில் வாழ்வதைவிட ,  தேன் உண்ணும் குறவர் வாழும் இடமாகிய மலையில்  வாழ்தல் நன்று.

”ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே “ –பிசிராந்தையார், புறநானூறு: 191.

கல்வி, கேள்வி, புலனடக்கம் யாவும் சிறந்து விளங்கும் சான்றோர் பலர் வாழும் ஊரே யான் வாழும் ஊர்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக