சனி, 6 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…54.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…54.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.”

வயதால், உருவத்தால், வசதிவாய்ப்பால் குறைந்தவர்கள் எல்லோரும் சிறுமைக் குணம் உடையவர் அல்லர் ; பிறர் வாடும் துன்பங்கண்டு மனம் வாருந்தி உதவி செய்ய முன்வராதவர்களே சிறியர் ஆவர்.

 

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந் தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.” –குறள்,667.

 

உருவத்தைக் கண்டு எவரையும் ஏளனம் செய்ய  வேண்டாம். அழகுடைய  பெரிய தேர் ஓடும்போதும் அசைந்து வலம் வரும்பொழுதும் அது கவிழ்ந்துவிடாதபடி, அளவில் மிகச்சிறியதாக இருக்கும் கடயாணியைப் போலச் சிறியோரும் வருந்தி வீழ்வாரைக் காக்கும் வல்லமை உடையவர்களே.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக