வியாழன், 9 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :482

திருக்குறள் – சிறப்புரை :482
 பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
 தீராமை ஆர்க்கும் கயிறு. --- ௪௮௨
 ஒரு செயலைச் செய்யத்தக்க காலம் அறிந்து  அக்காலத்தில் அச்செயலைச் செய்தல் வேண்டும்  அப்படிச் செய்வதனால்  காலமே தன்னிடத்து உள்ள செல்வத்தைச் சிதையாமல் கட்டிக் காக்கும் கயிறு ஆகும்.
“ அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
 பருவத்தால் அன்றிப் பழா. – வாக்குண்டாம்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக