ஞாயிறு, 19 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :492

திருக்குறள் – சிறப்புரை :492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம்
ஆக்கம் பலவும் தரும். --- ௪௯
போரிடுவதில் வல்லமை உடையவர்க்கும் அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களைத் தரும்.
“ வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை ….. தொல்காப்பியம்.

காட்டாற்று வெள்ளம்போல் வந்த பகைவரைக் கல்லணை போல் ஒருவனே எதிர்த்து நின்று வென்ற பெருமை உடையவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக