வெள்ளி, 24 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :497

திருக்குறள் – சிறப்புரை :497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின். ------- ௪௯
செய்யவேண்டியவற்றை முறையாகச் சிந்தித்து நிகழ்த்தும் இடத்தோடு பொருத்திச் செய்பவருக்கு அஞ்சாமையைத் தவிர வேறு எந்தத் துணைவலிமையும் தேவையில்லை.
” நசைதர வந்தோர் நசை பிறக்கு ஒழிய
 வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்… புறநானூறு.
வேந்தே! ஆவலால் வெற்றிபெற விரும்பிவந்த பகைவர் .நின்னை எதிர்த்து வெற்றிபெற முடியாமல் இகழ்ச்சியுடன் வாழ்வாராயினர்; அவ்வாறு வாழ்பவர் பலரே.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக