சனி, 11 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :484

திருக்குறள் – சிறப்புரை :484
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின். ---- ௪௮௪
  ஒருவன் ஒரு செயலைச் செய்ய வேண்டின் தக்க காலத்தைக் கருத்தில் கொண்டு தகுந்த இடத்தையும் தேர்வு செய்வானாயின் உலகத்தையே ஆள நினைத்தாலும் வெற்றி பெறுவான்.
“ செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
  இயற்கை அறிந்து செயல். குறள். 637

கல்வி அறிவால் ஒரு செயலைச் செய்யும் வகைகளை அறிந்திருந்த போதிலும் உலகத்தின் இயற்கை அறிந்து, அதனோடு பொருந்துமாறு செய்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக