திங்கள், 27 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :500

திருக்குறள் – சிறப்புரை :500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. --- ௫௰௰
பாகனுக்கும் அடங்காமல் வேல் ஏந்திய வீரர்களைக் கோத்து எடுத்த தந்தங்களை உடைய வலிமை மிக்க யானை. சேற்றில் சிக்கிக் கொண்டால் அதனை சிறிய நரிகூடக் கொன்றுவிடும்.
“ மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல் …” சிலப்பதிகாரம்.

மக்களைக் காக்கும் மன்னர் குடியிலே பிறத்தல் துன்பமே அல்லாது போற்றத்தக்கதன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக