வியாழன், 16 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :489

திருக்குறள் – சிறப்புரை :489
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல். --- ௪௮௯
ஒரு செயலைச் செய்வதற்குரிய அரிய காலம் வந்து கூடிய பொழுது அக்காலம் கழிவதற்குள் செய்தற்கு அரிய செயல்களைச் செய்துவிட வேண்டும்.
காலம் உயிர்போன்றது போயின் வாராது

காலம் கடத்தல் தவிர். நன்மொழி ஆயிரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக