செவ்வாய், 28 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :501

திருக்குறள் – சிறப்புரை :501
தெரிந்து தெளிதல்
அறன்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.  ---- ௫௰௧
அரசன் தனக்கு ஒருவனை உறுதுணையாகக் கொள்ள அவன் மனத்துள அறம் பொருள்  இன்பம் உயிருறும் துன்பம் ஆகியவற்றின் திறங்களை ஆராய்ந்து அறிந்த பின்னரே  அவனை வினையாற்ற உரியவனாகத் தேர்ந்து கொள்ள வேண்டும்.
“ இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
  அதனை அவன்கண் விடல்.” –குறள். 517.

இந்த வேலையை இந்த நுட்பத்தால் இவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அவ்வேலையை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக