சனி, 25 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :498

திருக்குறள் – சிறப்புரை :498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். ---- ௪௯
சிறிய படை உடைய அரசனும் போரில் வெல்வதற்குரிய சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பானாகில் பெரும் படை உடைய  அரசன் பொருந்தா இடத்தில் நின்று ஊக்கம் இழக்கவும்  படையும்  அழிந்து கெடும்.
“ குடப்பால் சிலுறை போலப்
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே.” – புறநானூறு.

குடம் நிறைந்த பாலின்கண் தெளிந்த சிலவாகிய பிரை. பால் முழுவதையும் கெடுத்துவிடுவதைப் போல. பகைவரின் படைத்திரள் முற்றும் கெட்டு அழிய. அவன் ஒருவனே காரணமாயினன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக